இடி விழுந்ததில் அதிர்ச்சி அடைந்த 14 மாணவர்கள் மயக்கம்
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே இடி விழுந்ததால் ஏற்பட்ட சத்தத்தால் அதிர்ச்சி அடைந்த 14 மாணவ, மாணவியர் மயக்கமடைந்தனர். அனைவரும் திருவள்ளூர் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருவள்ளூர் அருகே உள்ள மேலனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் இன்று காலை தங்களது ஊர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது பலத்த இடியுடன் மழை பெய்தது.
அந்த சமயத்தில் ஒரு இடி அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு அருகே பலத்த சப்தத்துடன் விழுந்தது. இதைக் கேட்ட 5 மாணவியர் உள்பட 14 பேர் மயக்கமடைந்தனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள் உடனடியாக அனைவரையும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். 14 பேரும் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் திருவள்ளூர் மற்றும் மேலனூரில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications