தமிழர்கள் சாக துணை போகும் இந்திய அரசு: வைகோ

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி சிபிஐ நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது:
ஐநாவின் மனித உரிமைகள் கமிஷனின் தலைவர் லூயிஸ் ஹார்பர் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிக்கு செல்ல அந்நாட்டு அரசு அனுமதி மறுத்தது. கொழும்புவில் ஐநா அலுவலகம் திறக்க கடந்த ஓராண்டாக அனுமதி கேட்டும் இதுவரை கிடைக்கவில்லை.
தமிழர்கள் வாழும் பகுதியில் இருந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் அந்நாட்டு அரசு வெளியேற்றிவிட்டது. இந்த நடவடிக்கைககள் இலங்கை அரசின் இனபடுகொலையில் ஈடுபடுகிறது என்பதற்கான சாட்சிகள்.
இலங்கையில் தமிழர்களை குண்டு வீசி கொன்று குவிக்கும் ராஜபக்சே அரசின் இனபடுகொலைக்கு மத்திய அரசு உதவி வருகிறது. மூன்று மாதத்துக்கு ஒருமுறை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்கே நாராயணன், சிவசங்கர் மேனன் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு சென்று அந்நாட்டு அரசுடன் பேசுகிறார்கள்.
ராணுவ ரீதியான உதவிகளை செய்வதாகவும் பேட்டி அளிக்கின்றனர். புலிகளுடன் நடந்த போரின்போது ராடர் தளத்தில் நடந்த தாக்குதலில் காயமடைந்த இந்திய இன்ஜினீயர்கள் மூலம் மத்திய அரசின் உதவிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உணவும் மருந்தும் கிடைக்காமல் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு இந்திய அரசு துணைபோகிறது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுவேன். உணவையும் மருந்தையும் அனுப்ப மத்திய அரசு மறுப்பதற்கு முதல்வர் கருணாநிதிதான் காரணம்.
இலங்கை பிரச்சனையில் தற்போதைய நிலை என்ன என்பதை கருணாநிதி விளக்க வேண்டும். இந்திய-இலங்கை கூட்டு ராணுவ ஒப்பந்தம் வராவிடாமல் இடதுசாரிகள்தான் தடுத்தார்கள். அதற்காக அவர்களை பாராட்டுகிறேன் என்றார்.
-
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை!












Click it and Unblock the Notifications