அஸ்ஸாமில் பெரும் கலவரம் - தீவிரவாதிகள் தாக்குதலில் 7 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

Assam map
குவஹாத்தி: வடக்கு அஸ்ஸாமில் நேற்று இரவு பெரும் கலவரம் வெடித்தது. முஸ்லீம்களுக்கு எதிராக போடோ தீவிரவாதிகள் மேற்கொண்டுள்ள தாக்குதலில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவி வருகிறது.

வடக்கு அஸ்ஸாமில் வசித்து வரும் வெளி மாநில முஸ்லீம்களைக் குறி வைத்து போடோ தீவிரவாதிகள் இந்த கலவரத்தா மேற்கொண்டுள்ளனர். குடிபாரி, சோனா பாரி, ஜார்காவன் ஆகிய பகுதிகளில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை 52 மூடப்பட்டுள்ளது. மேற்கண்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் நடந்து வரும் வன்முறைக்கு இதுவரை 7 முஸ்லீம்கள் பலியாகியுள்ளனர். நேற்று 3 பேரும், இன்று நான்கு பேரும் கொல்லப்பட்டனர்.

உதல்குரி மாவட்டம் ரோவ்தா மார்க்கெட்டை தீவிரவாதிகள் தீவைத்து எரித்தனர். கலவரம் மேலும் பரவாமல் தடுக்க அதிக அளவிலான போலீஸார் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+