டாடா, மேற்கு வங்க அரசின் கூட்டு நாடகம் - மமதா கருத்து
கொல்கத்தா: டாடா நிறுவனம் மேற்கு வங்கத்ைத விட்டு வெளியேறுவதாக ரத்தன் டாடா கூறியிருப்பது, டாடா நிறுவனமும், மேற்கு வங்க அரசும் சேர்ந்து நடத்தியுள்ள கூட்டு நாடகம் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
நானோ ஆலையை மேற்கு வங்கத்தை விட்டு கொண்டு செல்வதாக ரத்தன் டாடா அறிவித்திருப்பது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், இது மேற்கு வங்க அரசும், டாடா நிறுவனமும் சேர்ந்து நடத்தியுள்ள நாடகம். எங்களது நிலையில் எந்த மாறறமும் இல்லை. நிலத்தை மீட்கும் எங்களது போராட்டம் தொடரும்.
ரத்தன் டாடா பேசியிருப்பது சுத்தமான அரசியல் பேச்சு. தொழில் வளர்ச்சியும், விவசாயமும் கை கோர்த்துச் செல்ல வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.
விவசாயத்தையும், விவசாயிகளையும் அழித்து விட்டு தொழில் நிறுவனங்களை அமைக்க முடியாது. டாடாவின் அறிவிப்பால் எங்களது நிலையில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை. நிலத்தை மீட்கும் போராட்டத்தை தொடருவோம் என்றார் மமதா.












Click it and Unblock the Notifications