பாஜக எம்.பிக்கு சரமாரி அடி - போலீஸார் மீது கொலை முயற்சி வழக்கு
சாகர்: மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. வீரேந்திர குமாரை, ரயில்வே போலீஸார் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய ரயில்வே போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 7 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐந்து பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ம.பி. மாநிலம் சாகர் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாஜகவைச் சேர்ந்த வீரேந்திர குமார். அங்குள்ள பினா ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள சோட்டி பஜாரியா பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரயில்வே நிலத்தை மீட்கும் பணியில் நேற்று ரயில்வே போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த வீரேந்திரகுமாரும், பாஜகவினரும் அதைத் தடுக்க முயன்றனர்.
இதையடுத்து ரயில்வே போலீஸார் எம்.பி. உள்ளிட்டோரை சரமாரியாக லத்திகளால் தாக்கினர். இதில் வீரேந்திர குமார் படுகாயமடைந்தார். அவரது தலை மற்றும் கையிலிருந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து உடனடியாக அவரை போபால் ஹமீதியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்த சம்பவத்தால் கொதிப்படைந்த சாகர் பாஜகவினர் அங்கு பந்த் நடத்த அழைப்பு விடுத்தனர். இதையடுத்து சாகர் நகரில் கடைகள் அடைக்கப்பட்டன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரயில்வே இன்ஸ்பெக்டர் விவேக் சர்மா, உதவி சப் இன்ஸ்பெக்டர் சர்மா, ஜவான்கள் சுதீர், கோகுல், கர்தார் சிங் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பீனா ரயில் நிலைய ரயில்வே போலீஸ் அதிகாரி பத்குர்ஜார், கமாண்டன்ட் சரிகா மோகன், இன்ஸ்பெக்டர் விவேக் சர்மா மற்றும் நான்கு போலீஸார் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications