நேபாள நாட்டு மசூதியில் குண்டுவெடிப்பு - 5 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
காத்மாண்டு: நேபாள நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
கிழக்கில் உள்ள மொராங் மாட்டத்தின், ஹட்டிமோடா கிராமத்தில் உள்ள மசூதியில் நேற்று இரவு சில விஷமிகள் குண்டை எரிந்து விட்டுச் சென்றனர். அது பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியதில் மசூதியில் இருந்த 5 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்பது தெரியவில்லை. போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications