அதிமுக 37வது ஆண்டு விழா: 17 முதல் 19 வரை பொதுக் கூட்டங்கள்
சென்னை: அதிமுகவின் 37வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு வருகிற 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக தொடங்கி 36 ஆண்டுகள் நிறைவடைந்து வருகிற 17ம் தேதி 37வது ஆண்டு தொடங்குகிறது. இதை கொண்டாடும் வகையில் அன்றைய தினம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து கட்சிக் கொடியை ஏற்றி அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறேன்.
இதைத் தொடர்ந்து 18 மற்றும் 19ம் தேதிகளில் தமிழகத்திலும், அதிமுக செயல்படும் புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
பொதுக் கூட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அந்த கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும் தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக் கூட்ட நிகழ்ச்சிகளை கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோருடன் இணைந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications