ஈழப் பிரச்சினை: இந்திய - இலங்கை அரசுகள் பேச வேண்டும் - ராஜா
சென்னை: ஈழத்தமிழர் பிரச்சனையில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு வார்த்தை மட்டும் போதாது. அரசு மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுப்பட்டு நிற்பது வரவேற்கத்தக்கது. இலங்கை தமிழர்கள் தொடர்ந்து விவரிக்க முடியாத கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
அந்நாட்டு அரசே அவர்கள் மீது யுத்தத்தை தொடுத்து விமானங்கள் மூலமாகவும், தரை வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பல்லாயிரக் கணக்கான மக்கள் அகதிகளாகியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து பொருட்கள் கூட கிடைக்க வழியில்லை.
இந்த நிலையில்தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் தழுவிய அளவில் சர்வ கட்சிகளுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது. இந்த பிரச்சனை தமிழகம் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல. இது ஒரு அகில இந்திய பிரச்சனை. எனவே, மத்திய அரசு இதில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.
ஈழத்தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தனது கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். இதற்கு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு வார்த்தை மட்டும் போதாது. அரசு மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்.
பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் புஷ்ஷூடன் பேசி வருகிறார். அதே போல, இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த அந்நாட்டு பிரதமருடன், மன்மோகன் சிங் பேச வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதுடன், இந்திய மீனவர்களும் அந்நாட்டு கடற்படையால் தாக்கப்படுகின்றனர். சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இலங்கையில் போரால் பாதிக்கப்படும் தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வருகிறார்கள்.
இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவுத் துறை அமைச்சரும் தலையிட வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications