நேபாளத்தில் விமான விபத்து: 18 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காத்மண்ட்: நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் பயணிகள் உள்பட 18 பேர் பலியாயினர்.
நேபாளத்தில், ஏடி ஏர்லைன்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான குட்டி விமானம் 16 பயணிகள், 3 ஊழியர்களுடன் லுக்லா விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக விமானம் விபத்துக்குள்ளானது. எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகே இந்த விபத்து நடந்துள்ளது.
இதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக விமானி மட்டும் உயிர் தப்பினார்.
இறந்தவர்களில் 14 பேர் வெளிநாட்டினர். மற்றவர்கள் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 12 பேர் ஜெர்மனியைச் ேசர்ந்தவர்கள்.
வானிலை மோசமாக இருந்த காரணத்தால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications