ராஜா ஆள் கடத்தல் வழக்கு: பெருந்துறை டி.எஸ்.பி. மாற்றம்
Subscribe to Oneindia Tamil
பெருந்துறை: முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மீதான ஆள் கடத்தல் வழக்கில் ராஜாவை சரியாக விசாரிக்காத குற்றத்திற்காக பெருந்துறை டி.எஸ்.பி. ராமசாமி இடமாற்றம் செய்யப்பட்டார்.
பெருந்துறையைச் சேர்ந்த பழனிச்சாமி, அவரது மனைவி மலர் விழி, மகன் சிவபாலன் ஆகியோரை கடத்தியதாக சர்ச்சையி்ல் சிக்கி பதவியிழந்தார் ராஜா.
இன்னும் சிவபாலன், ராஜா கட்டுப்பாட்டில்தான் இருப்பதாக பழனிச்சாமி தரப்பு கூறி வருகிறது.
இந்த நிலையில் ராஜா மீது புதிதாக நேற்று ஒரு வழக்கு பதிவு செய்ய்பட்டது. இந்த நிலையில், வழக்கு தொடர்பாக ராஜாவை சரியாக விசாரிக்காதற்காக பெரு்நதுறை டி.எஸ்.பி. ராமசாமி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பெருந்துறையிலிருந்து வள்ளியூருக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications