சிரஞ்சீவி பிரசாரம்: கூட்ட நெரிசலில் இருவர் பலி
ஸ்ரீகாகுளம்: நடிகரும் பிரஜா ராஜ்ஜியம் கட்சி தலைவருமான சிரஞ்சீவி மேற்கொண்ட இருவேறு பிரசாரத்தின்போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 2 பேர் பரிதாபமாக பலியாயினர்.
தனது பிரஜா ராஜ்ஜியம் கட்சியை மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும், செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்ளவும் அக்கட்சியின் தலைவர் சிரஞ்சீவி மாநிலம் தழுவிய பிரசாரத்தை இரண்டு தினங்களுக்கு முன் தொடங்கினார்.
கடற்கரை மாவட்டங்களில் தற்போது பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீகாகுளம் மாவட்டம் அரசவல்லி மற்றும் சோமபேட்டா ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் முகமது ஷேக் மதீனா (28), சிம்மாச்சலம் (37) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறிய சிரஞ்சீவி கட்சி சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.