For Daily Alerts
Just In
இலங்கை விவகாரம்: இன்று நடிகர் சங்கம் ஆலோசனை
சென்னை: இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக வரும் 19-ம் தேதி தமிழ் திரையுலகம் அறிவித்துள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது குறித்து நடிகர் சங்கத்தில் இன்று திங்கள்கிழமை மாலை அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் ஓரணியில் ஒன்று திரண்டு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக வரும் 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் சினிமாவின் அத்தனை கலைஞர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடிகர் சங்கத்தில் இன்று செயலாளர் ராதாரவி தலைமையில், அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் செயற்குழு உறுப்பினர்கள் 21 பேரும், பொருளாளரும் கலந்து கொண்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காமல் தவிர்ப்பவர்கள் மீது இம்முறை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Monday, October 13, 2008, 16:56 [IST]