தத்தளிக்கும் வங்கிகளுக்கு மேலும் ரூ.25,000 கோடி!

வங்கிகளின் ரொக்கப் புழக்கம் மற்றும் இருப்புத் தன்மையை மேம்படுத்தவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.
பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய ரிசர்வ் வங்கி மூன்று கட்டுப்பாடுகளை வணிக வங்கிகள் மீது விதித்தது. அதில் முக்கியமானது சிஆர்ஆர் எனப்படும் ரொக்க இருப்பு விகிதம். அதை சமீபத்தில்தான் 1.5 சதவிகிதம் வரை குறைத்து பணப் புழக்கத்தை அதிகரித்தது.
அடுத்து, வணிக வங்கிகளுக்கு தான் வழங்கும் குறுகிய கால கடன்களின் மீது கடுமையான வட்டியை விதித்தது ரிசர்வ் வங்கி. இதனை வங்கி வட்டி விகிதம் அதாவது ரெபோ ரேட் என்கிறார்கள். இதையும் தற்போது 2 சதவிகிதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளது.
அடுத்து, அரசுத் திட்டங்களுக்காக நிதி திரட்ட வெளியிடப்படும் பத்திரங்களில் குறிப்பிட்ட அளவு தொகையை முதலீடு செய்தாக வேண்டும் அனைத்து வங்கிகளும் (எஸ்எல்ஆர்). இந்த முதலீட்டு அளவையும் 2 சதவிகிதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளது ரிசர்வ் வங்கி. இதன் மூலம் மட்டுமே ரூ.70 ஆயிரம் கோடி கூடுதல் பணப் புழக்கம் ஏற்படும்.
இத்துடன் நில்லாமல், வணிக வங்கிகள் தள்ளுபடி செய்த விவசாயக் கடன்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.25 ஆயிரம் கோடியை உடனடியாக ரிலீஸ் செய்யவும் ரிசர்வ் வங்கிக்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது மத்திய நிதி அமைச்சகம்.
இந்த தளர்வுகள் எந்த அளவு ரொக்கப் புழக்கத்தை அதிகரித்து, வங்கிகளின் செயல்பாட்டை நிதானத்துக்குள் கொண்டு வரப் போகின்றன என்பது போகப் போகத்தான் தெரியும்.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications