சென்னை-விதி மீறிய 200 கட்டடங்களை இடிப்பு
சென்னை: சென்னையில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை சிஎம்டிஏவும், மாநகராட்சியும் இணைந்து இடிக்கும் பணியை தொடங்கியுள்ளன. 200 கட்டடங்கள் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக அரசு 2007 ஜூலை மாதம் ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்தது. விதிமுறை மீறி கட்டிய கட்டிடங்களை அடுத்த ஓராண்டு இடிக்க மாட்டோம் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. அது மேலும் ஓராண்டு (இந்த ஆண்டு) நீட்டிக்கப்பட்டது.
இதுகுறித்த உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும் (சிஎம்டிஏ) சென்னை மாநகராட்சியும் சேர்ந்து விதிமுறை மீறிய கட்டிடங்களை இடிக்க தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் விக்ரம் கபூர் கூறியதாவது:
சென்னையில் இதுவரை 200 கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஜூலை 2007ம் ஆண்டுக்கு பிறகு கட்டியது அல்லது அதற்கு பிறகு ஒப்புதலுக்காக விண்ணப்பித்திருந்தது இதில் அடங்கும்.
விதிமுறை மீறி கட்டிய உங்கள் கட்டிடங்களை ஏன் இடிக்க கூடாது என்று விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்படுகிறது. அவர்களுடைய விளக்கம் திருப்திகரமாக இல்லாததால் சென்னை மாநகராட்சியுடன் சேர்ந்து அக்கட்டிடங்களை இடிக்க தொடங்கியுள்ளோம்.
இதுவரை 5 கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இது இன்று தொடங்கி நாளை முடியும் நடவடிக்கை அல்ல. புதிதாக கட்டிடம் கட்டுவோர் தங்களது கட்டட வரை படத்தில் கொடுக்கப்பட்டுள்ளதையே பின்பற்றி கட்ட வேண்டும். விதிமுறை மீறினால் கட்டடம் சட்டத்தின்படி இடிக்கப்படும் என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
சென்னை மாநகராட்சி இதுவரை 17 கட்டடங்கள் விதிமுறை மீறி கட்டியதாக கண்டறிந்துள்ளது. இதில் நேற்று வரை 5 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானவை சௌகார்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியாகும்.
இரண்டாவது கட்டமாக விதிமுறையைமீறிய கட்டடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வுக்குபின் அந்த கட்டடங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications