இலங்கை போரை நிறுத்தாவிட்டால் எம்பிக்கள் ராஜினாமா-அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்
Subscribe to Oneindia Tamil

முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடந்த கூட்டத்தில் பாமக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தி.க, விடுதலை சிறுத்தைகள் , சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன.
இதில், தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்தி வரும் போரை நிறுத்த, மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 வார காலத்திற்குள் போரை நிறுத்த தவறும் பட்சத்தில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக எம்பிக்கள் அனைவரும் கூண்டோடு பதவி விலக நேரிடும் என எச்சரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக் கூட்டத்தை அதிமுக, மதிமுக, பாஜக, தேமுதிக ஆகியவை புறக்கணித்துவிட்டன.












Click it and Unblock the Notifications