'அதிமுக 37': ராசிபுரத்தில் எம்ஜிஆர் சிலை திறக்கும் ஜெ
சென்னை: அதிமுகவின் 37வது ஆண்டு விழாவை முன்னிட்டு ராசிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆரின் சிலையை அக்கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.
இதுகுறித்து அக்கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எம்ஜிஆர், அதிமுகவை தொடங்கி 36 ஆண்டுகள் நிறைவடைகிறது. வரும் 17ம் தேதி 37வது ஆண்டு தொடங்குவதை கொண்டாடும் வகையில் அன்றைய தினம், கட்சி பொது செயலாளர் ஜெயலலிதா நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திற்கு சென்று, அங்கு நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆரின் சிலையை திறந்து வைக்கிறார்.
பின்னர் கட்சி கொடியை ஏற்றி வைத்து, விழா சிறப்பு மலரை வெளியிடுகிறார். அதைத் தொடர்ந்து அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
அதே போல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமைக் கழகத்தில் 17ம் தேதி காலை 10 மணிக்கு, அவைத் தலைவர் மதுசூதனன், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.