For Daily Alerts
Just In
நெல்லை-ரேஷன் கடை கட்டடம் இடிந்து 3 பேர் பலி
நெல்லை: நெல்லை அருகே ரேஷன் கடை கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.நெல்லை அருகே உள்ள வாசுதேவநல்லூர் அம்பேத்கார் நகரில் ரேஷன் கடை ஒன்று உள்ளது. அங்கு இன்று மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது. இதை வாங்குவதற்காக அதிகளவிலான பெண்கள் ரேஷன் கடையில் குவிந்திருந்தனர்.
அப்போது திடீரென்று ரேஷன் கடை கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் செல்லம்மாள் (55), முத்துப்பாப்பா (56) மற்றும் செல்லத்தாய் (56) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையில் ரேஷன் கடை கட்டடம் சேதமடைந்தது. இந்நிலையில் இன்று திடீரென்று இடிந்து விழுந்துவிட்டது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸார் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Story first published: Wednesday, October 15, 2008, 14:56 [IST]