எப்.எம் ரேடியோவிலும் செய்திகளுக்கு அனுமதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தனியார் எப்.எம். ரேடியோக்களிலும் விரைவில் செய்திகளுக்கு அனுமதி தரப்படவுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஏராளமான தனியார் எப்.எம். ரேடியோக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றன. ஆனால், இதுவரை செய்திகளுக்கு அனுமதி தரப்படவில்லை.
இந் நிலையில் நீண்ட யோசனைக்குப் பின் மத்திய அரசு எம்.எம்மில் செய்திகளுக்கு ஒப்புதல் அளிக்க முன் வந்துள்ளது.
ஆனால், இந்த எப்.எம். ரேடியோக்கள் தாங்கள் சொந்தமாக தயாரித்த அல்லது சேகரித்த செய்திகளை ஒலிபரப்ப முடியாது. அகில இந்திய வானொலி (ஏஐஆர்) நிறுவனம் தயாரிக்கும் செய்திகள் இந் நிறுவனங்களுக்கு தரப்படும். அவற்றை மட்டுமே இந்த எப்எம் ரேடியோக்கள் ஒலிபரப்ப முடியும்.












Click it and Unblock the Notifications