For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரு வேறு விபத்துக்கள்: ஒருவர் பலி-27 பேர் காயம்

By Staff
Google Oneindia Tamil News

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த இருவேறு விபத்துகளில் ஒருவர் பலியானார். 27 பேர் காயமடைந்தனர்.

திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் நாராயணமங்கலம் அருகே சென்று கொண்டிருந்த வேன் மீது பின்னால் வந்த வேன் பயங்கரமாக மோதிய விபத்துக்குள்ளானது.

இதில் பெல் ஊழியர் பன்னீர் செல்வம் பலியானார். 2 பெண்கள் உள்பட 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மற்றொரு விபத்தில் வேனில் பயணம்ச செய்த 23 பேர் காயமடைந்தனர். சென்னையில் இருந்து கரூருக்கு சென்று கொண்டிருந்த களத்தூர் என்ற இடத்தில் வேன் மீது ஆம்னி பஸ் மோதியதில் வேனில் பயணம் செய்த 23 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த இரு விபத்துக்கள் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X