தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரம் கனமழை

Subscribe to Oneindia Tamil

Monsoon
சென்னை: சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால் மாநிலம் முழுவதும் மழை கொட்டி வருகிறது. பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இடி மின்னலுடன் கனமழை பெய்யும். செனனையில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.

எனினும் மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடப்படவில்லை.

சாத்தூர்-வீடு இடிந்து 4 பேர் பலி:

இதற்கிடையே சாத்தூரில் தொடர் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் பெண் குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக பலியாயினர்.

ஆர்.சி.சர்ச் தெருவில் இச் சம்பவம் நடந்தது.

ஆரோக்கியராஜ் என்பவரின் வீடு நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்ததில் மரியம்மாள் (70), டெய்சி ராணி (46), அனுசுயா (26), பாரதி (3) ஆகியோர் உயிரிழந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+