For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு: 42 வி.சிறுத்தைகள் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து அதிபர் ராஜபக்சேயின் கொடும்பாவியை எரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 42 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து வட சென்னை மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வண்ணாரப்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கபிலன் தலைமை வகித்தார்.

ஆர்பாட்டத்தின்போது இலங்கை அதிபர் ராஜபக்சே உருவ பொம்மையை பாடையில் கட்டி ஊர்வலமாக எடுத்து சென்று எரித்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அதை தடுத்தனர்.

இது தொடர்பாக பகுதி செயலாளர் நீதி, கேசவன் உள்பட 42 பேர் கைது செய்யப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X