ஊழியர்கள் வரவில்லை-ரிசர்வ் வங்கி ஸ்தம்பிப்பு
மும்பை: ரிசர்வ் வங்கியின் பெரும்பாலான பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பில் சென்றுவிட்டதால், சம்பளப் பட்டுவாடா போன்ற முக்கிய பணப் பரிவர்த்தனைப் பணிகள் முடங்கிப் போயுள்ளன.
ஓய்வு பெறும் பணியாளர்களின் பென்ஷனைக் குறைக்க ரிசர்வ் வங்கி நிர்வாகம் முடிவெடுப்பதற்கு எதிராக ரிசர்வ் வங்கி ஊழியர்கள் போராடி வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக, இன்று இந்த வங்கியின் பெருமாபாலான ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பில் சென்றுவிட்டனர்.
இனால் நாடு முழுவதும் ரிசர்வ் வங்கி மூலம் பட்டுவாடா செய்ய வேண்டிய சம்பளப் பணம் மற்றும் இதர பணப் பரிவர்த்தனைகள் முழுமையாக பாதிக்கப்பட்டன.
இதுகுறித்து முன்பே தெரிந்திருந்ததால், இதர வணிக வங்கிகள் அனைத்தின் பரிவர்த்தனைகளையும் நேற்றே முடித்துக் கொள்ளச் சொல்லி சுற்றறிக்கை அனுப்பியிருந்தது ரிசர்வ் வங்கி.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி நிர்வாகம் கூறியுள்ளதாவது:
பணியாளர்கள் இப்படி ஒட்டுமொத்தமாக விடுப்பில் செல்வது, வேலை செய்ய மறுப்பதற்கும், சட்டவிரோத வேலை நிறுத்தத்துக்கும் சமம். இவர்களுக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்படும்.
இன்று பொதுவான பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வணிக வங்கிகளுக்குத் தேவையான ரொக்க இருப்பு நேற்றே வழங்கப்பட்டுவிட்டது.












Click it and Unblock the Notifications