For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வர்த்தகத்துக்காக திறக்கப்பட்ட ஸ்ரீநகர்-முஸாபராபாத் சாலை

By Staff
Google Oneindia Tamil News

Kashmir Road
சலாம்பாத் (ஜம்மூ-காஷ்மீர்): ஜம்மூ காஷ்மீர்- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் இடையிலான நெடுஞ்சாலை 60 ஆண்டுகளுக்குப் பின் முதன் முறையாக இன்று வர்த்தகத்துக்காக திறந்துவிடப்பட்டது.

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே சாலை வழியிலான எல்லை கடந்த வர்த்தகம் துவக்கப்பட்டுள்ளது.

ஜம்மூ-காஷ்மீர் ஆளுநர் என்.என்.வோரா கொடியசைத்து சரக்குகள் ஏற்றப்பட்ட 13 டிரக்குகளின் பாகிஸ்தான் பயணத்தை துவக்கி வைத்தார். இந்த லாரிகளில் பூக்கள், தேன், பழங்கள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தச் சாலை கடந்த 2005ம் ஆண்டு பயணிகள் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. இப்போது தான் இதன் வழியே வர்த்தகப் போக்குவரத்தும் அனுமதிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பின் இந்தச் சாலை வழியே வர்த்தக போக்குவரத்து நடப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த லாரிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் கடைசி ராணுவ போஸ்டான அமன் சேது பாலம் வழியாக பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் சகோடி பகுதி வரை செல்லு்ம்.

அதே போல பாகிஸ்தானின் முஸாபராபாத்திலிருந்து வரும் லாரிகள் இந்தியாவின் சலாம்பாத் பகுதி வரை அனுமதிக்கப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X