மின்வெட்டு: அரசு கின்னஸ் சாதனை- ஜெயலலிதா

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மின் வினியோக கட்டுப்பாட்டு முறை என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக் குறிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்' அமைந்துள்ளது.
தமிழகத்தின் தற்போதைய மின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, பொது மக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்காக, மின் வினியோக கட்டுப்பாடு முறை கொண்டு வரப்பட்டிருப்பதாக தமிழக அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால், அதில் உள்ள கட்டுப்பாட்டு முறைகள், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை பெருமளவு அதிகரித்துள்ளதே தவிர குறைத்துள்ளதாக தெரியவில்லை.
6 மணி நேரம் மின்சார வெட்டு என்று அறிவித்தபோதே, நடைமுறையில் கிட்டத்தட்ட 20 மணி நேரம் அளவுக்கு மின்சார வெட்டு இருந்தது. தற்போது 10 மணி நேரம் என்று அறிவித்ததன் மூலம், இனி மின்சாரமே வராது என்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஏற்கெனவே நிலவும் மின்சார வெட்டின் காரணமாக வேலை இழப்பு, ஊதிய இழப்பு என தமிழக மக்கள் அனை வரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், மேலும் மின் வெட்டை அறிவித்ததோடு மட்டுமல்லாமல், 50 சதவீதம் அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று.
மேலும் மின்சாரம் பயன்படுத்துவதைக் குறைக்குமாறு கூறியிருப்பது மக்களை கற்காலத்துக்கு அழைத்துச் செல்லும் செயலாகும்.
இது போன்ற அறிவிப்பினால், அனைத்துத் தொழில்களும் முடங்குவதோடு மட்டுமல்லாமல், அனைத்துத் தொழிலாளர்களும் வேலை இழக்க நேரிடும்.
தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், விமான போக்குவரத்து நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் என பல தரப்பட்ட நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் இந்தத் தருணத்தில், இது போன்ற அறிவிப்பு அனைத்து பிரிவினரையும் சொல்லொணா வேதனை அடைய வைத்துள்ளது.
இது போன்ற அறிவிப்பின் காரணமாக, இறந்தவர்களின் உடல்களை எரிப்பதில் கூட தாமதம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
தமிழக அரசின் மின்சாரவெட்டு தொடர்பான அறிவிப்பையடுத்து, புதிதாக தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளும் புகைப்படங்களும் எல்லாமே வெறும் கண்துடைப்பு நாடகம், அது காகித வடிவில் தான் இருக்கும் என்பதை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டுவிட்டார்கள்.
மின்வெட்டில் இந்த அரசு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சிக்கலாம்.
மின்சார வினியோகத்தை சரியாக கையாளாத முதல்வர் கருணாநிதி அதற்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும், சட்டசபையைக் கலைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
தமிழக தேர்தல் வரலாறு: ‘ஜெ’ அணியா? ‘ஜா’ அணியா? - செங்குத்தாக உடைந்த அதிமுக.. அன்று நடந்தது என்ன? -
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
இந்தியாவின் பெரிய ரிங் ரோட்டில்.. வருது ராட்சச ரயில் பாதை.. தமிழக அரசு கிரீன் சிக்னல்! தரமான முடிவு -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!











Click it and Unblock the Notifications