For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சங்கரன்கோவில்-நாட்டாண்மை மனைவி படுகொலை

By Staff
Google Oneindia Tamil News

சங்கரன்கோவில்: சங்கரன் கோவில் அருகே நாட்டாண்மை மனைவி வெட்டிக் கொல்லப்பட்டார்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள மறுக்காலன்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அழகையா. ஊர் நாட்டாண்மையாக இருந்த இவர் தற்போது கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராமாத்தாள்.

இவர்களுக்கு சமுத்திரகனி, மணித்தாய் ஆகிய மகள்களும், சமுத்திரபாண்டியன் என்ற மகனும் உள்ளனர். இரு மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. சமுத்திரபாண்டியன் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

ஊரில் தனியாக வசித்து வந்த ராமாத்தாள், தெற்குபனவடலிசத்திரத்தில் உள்ள மாயன்பெருமாள் என்பவரது தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார்.

காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற ராமாத்தாள் இரவு வெகுநேரமாகியும் வீடுதிரும்பவில்லை. இதனால் அவரது இளையமருமகன் வெள்ளத்துரை மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மாயன்பெருமாள் தோட்டத்திற்கு சென்றவர்கள் அங்கு ராமாத்தாள் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் எஸ்பி ஆஸ்ரா கர்க், டிஎஸ்பி (பொறுப்பு) அசோக்குமார், பனவடலிசத்திரம் இன்ஸ்பெக்டர் ஆகியோர் விரைந்து விசாரணை நடத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X