For Daily Alerts
Just In
இம்பாலில் குண்டுவெடிப்பு- 17 பேர் பலி
இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நேற்று நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு இம்பால் மாவட்டம் ராகய்லாங் என்ற இடத்தில் காவல்துறை அதிரடிப்படை பயிற்சி மையம் உள்ளது. நேற்று இரவு இந்த மையத்திற்கு அருகே குண்டுவெடித்தது.
பயங்கர சப்தத்துடன் வெடித்த இந்த குண்டுக்கு 5 பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர்.
சைக்கிளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உள்ளூர் தீவிரவாதிகள்தான் இதற்குக் காரணம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களை முதல்வர் இபோபி சிங் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
Story first published: Wednesday, October 22, 2008, 10:27 [IST]