விப்ரோ வருவாய் அயர்வு; ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம்!
பெங்களூர்: இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் மூன்றாவது காலாண்டு லாபம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 19 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இந்தக் காலாண்டின் மொத்த வருமானம் 36 சதவிகிதம் வரை உயர்ந்து 65 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது.
அதிகரிக்கும் நிதி நெருக்கடிகள், பங்குச் சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்புக் குறைவு மற்றும் ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் போன்றவற்றுக்கிடையே இந்த அளவு அதிக வருவாயை இந்நிறுவனம் ஈட்டியுள்ளது.
இதற்கிடையே, விப்ரோவுக்கு கிடைக்க வேண்டிய பணி ஆணைகள் (ஆர்டர்கள்) இன்னமும் வரவில்லை என்று அதன் தலைமை நிதித்துறை அலுவலர் அறிவித்துள்ளார். ஆனால் இந்த ஆர்டர்கள் ரத்தாகவில்லை என்றும், விரைவில் அவற்றைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக ஆர்டர்கள் தருவதில் மிகுந்த எச்சரிக்கையைக் கடைபிடிக்கின்றனர் எங்களது கிளையண்டுகள். அதனால்தான் இந்த தாமதம் என்றும் அவர் கூறியுள்ளார்.