நவ. 10ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்-குப்தா
தஞ்சை: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 10ல் வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், தொகுதி சீரமைப்பால் ஏற்பட்ட வாக்குச்சாவடி மாற்றம் காரணமாக வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதில் சென்னை, கோவை, காஞ்சிபுரம், மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் புகைப்பட வாக்காளர் இறுதி பட்டியல் நேற்று வெளியிட்டப்பட்டது.
காஞ்சிபுரத்தில் இன்றும், சென்னையில் 30 ம் தேதியும், கோவையில் 31 ம் தேதியும் வெளியிடப்படும்.
வருடாந்திர வாக்காளர் பட்டியல் திருத்தம் வரும் 1-1- 09 தேதியை தகுதியாக கொண்டு நடைபெறும்.
திருத்தம் ஏதேனும் இருந்தால் நவம்பர் 24 க்குள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான சிறப்பு முகாம்கள் நவம்பர் 16, 23 தேதிகளில் நடைபெறும்.
இறுதி வாக்களர் பட்டியல் ஜனவரி 10 ம் தேதி அன்று வெளியிட்ப்படும் என்றார் அவர்.