Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

36 மணி நேரம் பலத்த மழை-வானிலை ஆய்வு மையம்

Subscribe to Oneindia Tamil

Monsoon
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 36 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அங்குமிங்கும் நகராமல் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டிருக்கிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்ேசரியில், தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை கடந்த 2 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. நேற்றிரவு விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இன்று காலையும் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக சென்னை நகரில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோயம்பேடு நூறடி சாலையில் ஆறுபோல் வெள்ளம் ஓடுகிறது. புரசைவாக்கம், சூளை, வியாசர்பாடி, வேளச்சேரி போன்ற பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

வடபழனி பஸ் நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம், கிண்டி பஸ் நிலையம் உட்பட பல்வேறு பேருந்து நிலையங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.

இந்த நிலையில், மழை மேலும் 36 மணி நேரத்திற்கு கொட்டித் தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+