பணவீக்கம் மேலும் குறைந்தது
டெல்லி: நாட்டின் பண வீக்கம் சற்று குறைந்துள்ளது. முந்தைய வாரமம் 11.44 சதவீதமாக இருந்த பண வீக்கம் ஆகஸ்ட் 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 11.07 சதவீதமாக குறைந்துள்ளது.
உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை குறைந்ததால் பண வீக்கம் சற்றே தளர்ந்துள்ளது.
நடப்பு வாரத்தில் ,காய்கறிகள், பழங்கள், முட்டைகள் உள்ளிட்டவற்றின் விலை குறைந்துள்ளது. அதேபோல சூரிய காந்தி, பருத்தி உள்ளிட்டவையும் விலை குறைந்துள்ளன.
பங்குச் சந்தை இன்றும் சரிவு:
இதற்கிடையே மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் 488 புள்ளிகள் சரிந்து மீண்டும் 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் இறங்கியது.
சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் காணப்படும் பின்னடைவு, எண்ணெய் விலை சரிவு மற்றும் சில நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியானதன் விளைவாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக பங்கு வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று மாலை வர்த்தக நேர இறுதியில் 513 புள்ளிகள் குறைந்திருந்த சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 488 புள்ளிகள் குறைந்து 9,681 புள்ளிகள் ஆனது. தேசிய பங்குச் சந்தையிலும் நிப்டி குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் 147 புள்ளிகள் குறைந்து 2,918 புள்ளிகள் ஆனது.
பார்தி ஏர்டெல், எல் அண்டு டி, ஆர்ஐஎல், ஐசிஐசிஐ பாங்க், ரிலையன்ஸ் இன்ப்ரா, எஸ்பிஐ, இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி, விப்ரோ, டாடா ஸ்டீல், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனங்களின் பங்கு விலைகள் நஷ்டத்தை சந்தித்தன.
வர்த்தக நேர முடிவில் 398 புள்ளிகள் குறைந்து 9771.70-ல் நிலைபெற்றது. நிப்டி 122 புள்ளிகள் குறைந்து 2943.15 ஆக இருந்தது.












Click it and Unblock the Notifications