போலீசாருக்கு எதிரான 203 மனுக்கள் தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

மதுரை: போலீசாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 203 மனுக்களை மதுரை உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

குற்ற நிகழ்வுகள் மற்றும் புகார் மீது வழக்கு பதிவு செய்யப்படாதது போன்ற காரணங்களுக்காக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு உத்தரவிடக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் 13 மாவட்டங்களில் இருந்து சுமார் 203 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி செல்வம் முன்னிலையில் நேற்று ஒரே நேரத்தில் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி செல்வம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 156(3)ன் படி ஒரு புகார் மனு மீது வழக்கு பதிவு செய்யக் கோருபவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

அப்படியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மட்டுமே சம்பந்தப்பட்ட கீழ் கோர்ட்டை அணுக வேண்டும். இந்த மனுக்கள் கீழ் கோர்ட்டை அணுகாமல் நேரிடையாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது தவறு என்று கூறி மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+