For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எனது நிலையில் மாற்றம் இல்லை - உறுதியாக இருக்கிறேன்: வைகோ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கைத் தமிழர்களைக் காக்க ஆயுதம் ஏந்திப் போராடுவேன் என்று நான் கூறியதில் எந்த மாற்றமும் இல்லை. எனது நிலையில் உறுதியாக இருக்கிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

பிரிவினைவாதத்ைத தூண்டும் வகையில் பேசியதாக கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மாலை கைது செய்யப்பட்டார்.

அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று வைகோவை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் அவர் போலீஸ் வேனில் பலத்த பாதுகாப்புடன் ஏற்றப்பட்டார். அப்போது திரண்டிருந்த செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், இலங்கை இனப் பிரச்சினையிலிருந்து தமிழர்களைக் காக்க ஆயுதம் ஏந்திப் போராடுவேன் என்று நான் கூறியதில் எந்த மாற்றமும் இல்லை. எனது நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

இலங்கை ராணுவத்திற்கு ரேடார்கள், ஆயுதங்களை வழங்கி, இலங்கைத் தமிழர்களைக் கொல்லும் போக்குக்கு பிரதமர் மன்மோகன் சிங் துணை போகிறார் என்று நான் கூறியதையும் இப்போது மீண்டும் வலியுறுத்தி கூறுகிறேன்.

இலங்கை படைகளுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்து, உளவுத் தகவல்களைக் கொடுத்து இலங்கைத் தமிழர்களுக்கு பெரும் துரோகம் இழைத்து வருகிறது மன்மோகன் சிங் அரசு என்றார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X