மீன் குழம்பு சாப்பிட்ட மாணவன் சாவு
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மீன் குழம்பு சாப்பிட்ட மாணவன் பரிதாபமாக இறந்தார். பாதிக்கப்பட்ட அவரது தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள உளுந்துகுப்பையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (45).
இவரது மனைவி தாமரைச் செல்வி. இவர்களது மகன் காத்தவராயன் (15), 10 ம் வகுப்பு படித்து வருகிறார்.
வீட்டில் சமைத்த மீன் குழம்பை பாலகிருஷ்ணனும் காத்தவராயனும் சாப்பிட்டனர். சாப்பிட்ட சிறிது நேரத்திற்குள் இருவரும் வாந்தி எடுத்தனர். உடனே அவர்களை சிதம்பரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி காத்தவராயன் பரிதாபமாக இறந்தார். பாலகிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படு வருகிறது.












Click it and Unblock the Notifications