சோமாலியா: இந்திய கப்பல்-மாலுமிகள் மீட்பு
மொகாதிஷு: சோமாலியாவில் கடத்தப்பட்ட இந்திய கப்பலையும், அதில் இருந்த 13 மாலுமிகளையும் கடத்தல்காரர்கள் விடுதலை செய்துள்ளனர்.
சோமாலியா கடற்பகுதியில் அடிக்கடி கடற்கொள்ளையர்கள் கப்பல்களை கடத்துவதும், மாலுமிகளை சிறைபிடிப்பதுமாக அட்டகாசம் செய்து வருகின்றனர். இவர்களில் அடிக்கடி இந்தியர்களும் சிக்கிக் கொள்கின்றனர்.
இதையடுத்து இங்கு ரோந்துக் கப்பலை அனுப்ப இந்தியா முடிவு செய்தது. இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமையன்று இந்தியக் கப்பல் ஒன்றை கடற் கொள்ளையர்கள், கடலோரப் பாதுகாப்புப் படையினர் உடையில் வந்து கடத்திச் சென்றனர். அக்கப்பலில் 13 மாலுமிகள் இருந்தனர்.
கப்பலில் இருந்தவர்களை மீட்க பாதுகாப்புப் படையினர் விரைந்தனர். அவர்கள் கடற் கொள்ளையர்களுடன் துப்பாக்கிச் சண்டையில் இறங்கினர். கடும் சண்டைக்குப் பின்னர் நான்கு கொள்ளையர்கள் பிடிபட்டனர். நான்கு பேர் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து கப்பலும், அதில் இருந்தவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 13 பேரும் காயமின்றி தப்பியதாக சோமாலியா அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, கடந்த மாதம் 18 இந்திய மாலுமிகளுடன் கடத்தப்பட்ட எம்.வி. ஸ்டோல்ட் வேலர் என்ற கப்பல் என்ன ஆனது என்று தெரியவில்லை. அதில் உள்ளவர்களின் நிலையும் தெரியவில்லை.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications