'வைகோ': திமுக-மதிமுக எம்பிக்கள் மோதல்
டெல்லி: வைகோ கைது மற்றும் இலங்கை அரசுக்கு இந்திய அரசு வழங்கி வரும் உதவிகளை கண்டித்து மதிமுக எம்பி கிருஷ்ணன் பேசியதற்கு திமுக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
லோக்சபாவில் கல்வி மசோதா மீது மதிமுக எம்பி சி.கிருஷ்ணன் பேசும்போது, இலங்கை அரசின் நடவடிக்கைகள் குறித்து விமர்சித்தார்.
மேலும், வைகோவை கைது செய்ததையும் கண்டித்தார். இதேபோல் இலங்கைக்கு இந்தியா அளிக்கும் ஆயுத உதவிகளை அந்நாட்டு அரசு தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது என்றார்.
அப்போது, திமுக எம்பிக்கள் எழுந்து கல்வி மசோதா பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும்போது, அதற்கு தொடர்பு இல்லாத பிரச்சினையை மதிமுக உறுப்பினர் எழுப்புகிறார் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இப்பிரச்சினை குறித்து கிருஷ்ணன் மேலும் பேசுவதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் மதிமுக உறுப்பினர் கிருஷ்ணன் சபையின் மையப்பகுதிக்குச் செல்ல முயற்சித்தார்.
சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மற்றும் மற்ற எம்பிக்களும் அவரை அமைதிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து தனது பேச்சை கிருஷ்ணன் முடித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications