For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போர் நிறுத்தம்-இந்தியாவுக்கு புலிகள் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை ராணுவம் நடத்தி வரும் படுகொலையை தடுத்து நிறுத்தி, போரை நிறுத்த இந்தியா உதவ வேண்டும் என விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பி.நடேசன் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஈழத்தில் நடக்கும் போரை உடனே நிறுத்த இலங்கை அரசுக்கு இந்தியா நெருக்கடி கொடுக்க வேண்டும். போரை நிறுத்தினால் மட்டுமே புலம் பெயர்ந்துள்ள அப்பாவி மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும். இந்தியாவிடம் நாங்கள் எதிர்ப்பாக்கும் உதவி இது தான்.

ராஜபக்சே அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ரகசிய பேச்சு நடப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. போரை நிறுத்தாமல் நாங்கள் எப்படி பேச்சு வார்த்தைக்கு உட்கார முடியும். போர் தீவிரமாக நடக்கும் நிலையில், எமது மக்கள் காடுகளில் தஞ்சம் அடைந்து அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நாங்கள் எப்படி பேச்சுவார்த்தைக்கு செல்வோம்?

கிளிநொச்சிக்குள் ராணுவம் வந்து விட்டதாக ராஜபக்சேவும், அவரது அகதிகாரிகளும் தவறான தகவலை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாதக் கணக்கில் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது திடீ ரென கிளிநொச்சியை பிடிக்க சில மாதம் ஆகும் என்கிறார்கள்.

சிங்கள ராணுவம் வேண்டும் என்றே தமிழர்கள் குடியிருப்புகளை தாக்கி அழிக்கிறது. தமிழ் இனம் காக்கப்பட வேண்டுமானால், அது இந்தியாவின் கையில்தான் உள்ளது. போரை நிறுத்த இந்தியா உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் எதிர்க்கிறோம் என்று கோரியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X