இந்திய பங்குச் சந்தையில் தீபாவளி ஷாக்!
மும்பை: தீபாவளி தினமான நேற்று இந்திய பங்குச் சந்தைகளில் மாபெரும் வீழ்ச்சி ஏற்பட்டு பின்னர் நிலைமை ஓரளவுக்கு சரியானது.
நேற்று வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 8,000 புள்ளிகளுக்குக் கீழே போனது. இதனால் பெரும் அதிர்ச்சியும் பீதியும் பரவியது.
பின்னர் ஒரு வழியாக சென்செக்ஸ் மேல்நோக்கி பயணித்து மாலையில் 8,509 புள்ளிகளுடன் முடிவடைந்தது. ஆனாலும் நேற்று மட்டும் சென்செக்ஸ் 191 புள்ளிகளை இழந்துவிட்டது.
கடந்த ஜனவரியில் தான் சென்செக்ஸ் இதுவரை இல்லாத உயரத்தைத் தொட்டது. 21,206 என்ற நிலையில் இருந்தது. இப்போது அது 12,697 புள்ளிகளை இழந்து 8,509 என்ற நிலைக்கு வந்துவிட்டது.
இது கிட்டத்தட்ட 60 சதவீத வீழ்ச்சியாகும். ஜனவரியில் 1000 ரூபாயாக இருந்த ஒரு பங்கின் மதிப்பு இப்போது வெறும் 40 ரூபாய் தான்.
இந் நிலையில் தீபாவளியையொட்டி இன்று பங்குச் சந்தையில் முகூர்த்த வர்த்தகம் நடக்கவுள்ளது. இன்று மாலை சில மணி நேரங்களே நடக்கவுள்ள இந்த வர்த்தகத்தி்ல் சென்செக்ஸ் என்ன ஆகுமோ என்ற அச்சம் பரவிக் கிடக்கிறது.
ஆனாலும், முகூர்த்த வர்த்தகம் என்பதால் சென்செக்ஸ் இழப்பை சந்திக்காது என்பதே பெரும்பாலான புரோக்கர்களின் கருத்தாக உள்ளது.