தீவிரவாத பெண் துறவிக்கு நார்கோ டெஸ்ட்!
Subscribe to Oneindia Tamil

மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக பெண் துறவியான பிரக்யா சிங் தாக்கூர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு உறுதுணையாக இருந்ததாக இரண்டு முன்னாள் ராணுவத்தினரும் கைதாகியுள்ளனர்.
இந்த நிலையில் பிரக்யா சிங்குக்கு இன்று நார்கோ அனாலிசிஸ் எனப்படும் உண்மை கண்டறியும் சோதனையும், மூளை வரைபட சோதனையும் நடத்தப்படவுள்ளது.
இதற்கான அனுமதியை நாசிக் கோர்ட் நேற்று வழங்கியது. நேற்று பிரக்யா உள்ளிட்ட 3 பேரும் நாசிக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த அனுமதியை கோர்ட் வழங்கியது. மேலும் 3 பேரின் போலீஸ் காவலும் நவம்பர் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications