மும்பை-ஓடும் ரயிலில் உ.பி வாலிபர் அடித்து கொலை

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் ஓடும் ரயிலில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மேலும் 3 பேர் உயிர் தப்பியுள்ளனர்.

ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா அமைப்பினர் வட மாநிலத்தவர்களைத் தாக்குதவது தொடர்ந்து வருகிறது.

இந் நிலையில் மும்பை புறநகர் பகுதியான கோபோலியில் இருந்து சிஎஸ்டி ரயில் நிலையத்துக்கு மின்சார ரயிலில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் பயணித்தனர்.

அப்போது 12 பேர் கொண்ட ஒரு கும்பல் அவர்களை சுற்றி வளைத்து கொலை வெறித் தாக்குதல் நடத்தியது. இதில் தரம் தேவ்ராய் என்ற வாலிபரின் மண்டை பிளந்துவிட்டது.

அப்போது பட்லபூர் ரயில் நிலையத்தில் ரயில் நிற்கவே 4 பேரும் அந்தக் கும்பலிடமிருந்து தப்பி கீழே இறங்கினர்.

தரம் தேவ்ராயை அவர்கள் மருத்துவமனையில் அனுமதி்த்தனர். ஆனால், சிகிச்சை பலனி்ன்றி அவர் இறந்தார்.

கொலையான வாலிபருடன் வந்த வீரேந்திர ராம் கோபால்ராய், சத்யபிரகாஷ் கெளஷல் ராய், சிவ்குமார் வர்மா ஆகிய மூவரும் பீகாரைச் சேர்ந்தவர்கள்.

மும்பை குர்லாவில் பஸ்சில் துப்பாக்கியுடன் ஏறி மிரட்டல் விடுத்த பிகார் வாலிபர் ராகுல் ராஜை போலீசார் சுட்டுக் கொன்ற அடுத்த நாள் இந்தக் கொலை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராகுல் ராஜ் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க மகாராஷ்டிர மாநில அரசின் தலைமைச் செயலாளர் ஜானி ஜோசப் தலைமையில் உயர்நிலைக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+