திருச்சியில் கோஷ்டி மோதல்: 15 பேர் காயம்- 35 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி அருகே ஆமூர் கிராமத்தில் இரு கோஷ்டியினரிடையே கோஷ்டி மோதல் மூண்டது. இதில் 15 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆமூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருகிறார். அப்பகுதியில் உள்ள ராஜேந்திரன் என்பவரது கடைக்கு இறைச்சி வாங்க அவர் சென்றார். அப்போது ராஜேந்திரனுக்கும், பழனிச்சாமிக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.

அக்கம் பக்கத்தினர் அவர்களை விலக்கி விட்டனர். இந்த நிலையில் பழனிச்சாமியின் தந்தை சன்னாசி, மதிய உணவுக்கு சாப்பிட வருமாறு அழைக்க பழனிச்சாமி இருந்த கடைக்குப் போனார். அப்போது ஒரு கும்பல் சன்னாசியை வழிமறித்து பழனிச்சாமி குறித்து கண்டித்து தகராறு செய்தனர்.

இதையடுத்து சன்னாச்சிக்கு ஆதரவாக சிலர் திரண்டனர். அவர்களும்,எதிர் தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர்.

கட்டைகள் உள்ளிட்டவற்றை கொண்டு சரமாரியாகத் தாக்கினர். இதில் 2 பெண்கள் உள்பட 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை முசிறி மற்றும் ஸ்ரீரங்கம் மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர்.

போலீஸார் விரைந்து வந்து 35 பேரைக் கைது செய்தனர். அங்கு தற்போது அமைதி நிலவுகிறது. போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+