சீமான்-அமீருக்கு ஜாமீன்: இன்று விடுதலை
இலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்து ராமேஸ்வரத்தில் கடந்த 19ம் தேதி திரை உலகத்தினர் சார்பில் பேரணியும் பொதுக்கூட்டமும் நடந்தது.
அதில் பேசிய சீமானும் அமீரும் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இருவரும் ஜாமீன் கோரி நேற்று முன்தினம் ராமநாதபுரம் விரைவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து ஜாமீன் மனுக்களை முன்னதாகவே விசாரிக்கக் கோரி அவர்கள் சார்பில் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் இன்னொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று நீதிபதி மாயாண்டி முன் விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சீமான், அமீருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அவர்கது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதி நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் மதுரை 1வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
இந்த உத்தரவைத் தொடர்ந்து இருவரும் இன்று விடுதலையாகின்றனர்.