'ஹிண்ட்ராப்': தமிழக கட்சிகள் மெளனம் ஏன்?-பாஜக
சென்னை: மலேசியாவில் வாழும் இந்தியர்களுக்காகக் குரல் கொடுக்கும் ஹிண்ட்ராப் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதை பாஜக தவிர வேறு எந்த கட்சியும் கண்டிக்கவில்லை என அக் கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையி்ல்,
ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ்நாட்டில் தங்கி உள்ளனர். இதை உள்நாட்டு பிரச்சினை என்று ஒதுக்கிவிட முடியாது. இலங்கை பிரச்சினையில் தலையிடுவதற்கான அதிகாரம் இந்திய அரசுக்கு உள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு தற்போது நிவாரண பொருட்கள், தமிழக அரசால் சேகரிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்த நிவாரண பொருட்கள் உண்மையிலேயே போய் சேரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?.
சுனாமி நேரத்தில் நாம் கொடுத்த நிவாரண பொருட்கள் இலங்கை தமிழர்களுக்கு போய்ச் சேரவில்லை. எனவே தற்போது அனுப்ப இருக்கும் நிவாரண பொருட்கள் போய்ச்சேரும் என்பதை எப்படி நம்புவது. செஞ்சிலுவை சங்கம் மூலமாக நிவாரண பொருட்களை அனுப்ப மத்திய அரசு அனுமதிக்குமா?.
நிவாரண பொருட்கள் இலங்கை தமிழர்களுக்கு போய் சேருகிறதா என்பது தெரியாமல் தமிழக பாஜக நிவாரண உதவிகள் வழங்குவதற்கான முயற்சிகள் எடுப்பதாக இல்லை.
இலங்கையில் தற்போது நடைபெறும் உண்மையான நிலவரம் எதுவும் தெரியவில்லை. எனவே ஐ.நா. சபையின் பார்வையாளர் குழு இலங்கைக்கு சென்று உண்மை நிலையை அறிந்து அதை மக்களுக்கு எடுத்து கூறவேண்டும்.
தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும் என்று தொல்.திருமாவளவன் பகிரங்கமாக பேசியிருக்கிறார்.
மலேசியாவில் வாழும் இந்தியர்களுக்காகக் குரல் கொடுக்கும் ஹிண்ட்ராப் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. அந்த அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும் என்று பாஜக தவிர வேறு எந்த கட்சியும் சொல்லவில்லை என்றார்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications