ராஜ் தாக்கரே ஒரு தேச விரோதி-பாஜக

பாஜக மூத்த தலைவரான கல்ராஜ் மிஸ்ரா லக்னெளவில் நிருபர்களிடம் பேசுகையில்,
உபி, பிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு தேச விரோத செயல். அதைச் செய்த ராஜ் தாக்கரே தேச விரோதி. தேச விரோதியை எப்படி நடத்துவோமோ அப்படித்தான் அவரை நடத்த வேண்டும். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகாராஷ்டிரத்தில் நடக்கும் வட இந்தியர்கள் மீதான தாக்குதலுக்கு அந்த மாநில காங்கிரஸ் அரசும் தான் பொறுப்பு என்றார்.
ஆனால், ராஜ் விஷயத்தில் மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் வாயே திறக்கவில்லையே என்று கேட்டதற்கு, தாக்குதலின் வலி உபியைச் சேர்ந்த எங்களுக்குத் தான் அதிகமாக தெரியும் என்றார். இதற்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.
தொடர்ந்து மிஸ்ரா பேசுகையில், சர்தார் படேலை தீவிரவாதி என வர்ணித்த முஸ்லீம் கவுன்சிலின் தலைவர் டாக்டர் தஸ்லீம் ரஹ்மானியை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலேகாவ்ன் குண்டுவெடிப்பில் தொடர்புடைய சாத்வி பிரஞ்யாவுடன் பாஜகவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. இஸ்லாமிய தீவிரவாதிகள் குறித்த மக்களி்ன் பார்வையை திசை திருப்பும் நடவடிக்கையின் ஒரு பகுதி தான் பிரஞ்யா கைதாகும் என்றார்.












Click it and Unblock the Notifications