தெலுங்கு-கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து
டெல்லி: தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
சமஸ்கிருதம் மட்டும் செம்மொழி அந்தஸ்துடன் இருந்த நிலையில் நீண்ட போராட்டத்துக்குப் பின் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து தரப்பட்டது.
இதையடுத்து கன்னடத்துக்கும் செம்மொழி அந்தஸ்து தரப்பட வேண்டும் என கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்தன. இந் நிலையில் இன்று தெலுங்கு மற்றும் கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி மத்திய அரசு உத்தரவி்ட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மத்திய சுற்றுலா மற்று கலாச்சாரத்துறை அமைச்சர் அம்பிகா சோனி இன்று டெல்லியில் வெளியிட்டார்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு ஆந்திரம், கர்நாடக மாநிலங்கள் உருவான தினமான ராஜ்யோத்சவா தினம் நாளை (நவம்பர் 1) கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
இந்த மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து தரப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு அது விசாரணையில் உள்ளது. அந்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு மத்திய அரசு எதி்ர் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications