கோவையில் போராட்டம்-அதிமுக எம்எல்ஏக்கள் கைது
கோவை: பசும்பொன் கிராமத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கார் மீது கல் வீச்சு நடந்ததை கண்டித்து கோவையில் அதிமுகவினர் மறியல் போராட்டத்தி்ல் ஈடுபட்டனர்.
மாநகர் மாவட்டச் செயலாளர் செ.ம.வேலுச்சாமி எம்எல்ஏ தலைமையில் எம்எல்ஏக்கள் வேலுமணி, மலரவன், சின்னசாமி, சின்னராஜ், தாமோதரன், பொன்னுதுரை, முன்னாள் அமைச்சர் தாமோதரன், முன்னாள் எம்எல்ஏக்கள் கே.பி.ராஜூ, மருதாசலம் உள்ளிட்டோர் அவினாசி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் உள்பட 335 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
அதேபோல திருப்பூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பல்லடம், அவினாசி, அவினாசிபாளையம், தொண்டாமுத்தூர், காரமடை, துடியலூர் ஆகிய இடங்களிலும் அதிமுகவினர் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தொண்டாமுத்தூரில் மறியலில் ஈடுபட்ட 51 அதிமுகவினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications