தென்காசி: மூளைக் காய்ச்சலு்கு சிறுவன் பலி
Subscribe to Oneindia Tamil
தென்காசி: தென்காசி அருகே மூளைக் காய்ச்சலு்கு சிறுவன் பலியானான்.
தென்காசி மற்றும் சுற்றுப்பகுதிகளில் குடிநீர் சுகாதாரமற்ற முறையில் விநியோகம் செய்யப்படுவதால் அடிக்கடி பொதுமக்கள் வாந்தி பேதியால் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக மழை காரணமாக குடிநீர் சுகாதாரமற்ற நிலையில் விநியோகம் செய்யப்பட்டதால் தென்காசி மற்றும் சுற்றுப்பகுதியினை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியதேவர் மகன் பாஸ்கர் என்பவனை மூளைகாய்ச்சல் நோய் தாக்கியது. அவனை தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு அவன் இறந்தான்.
மூளைகாய்ச்சல் நோயினால் சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications