குருவுக்காக திருச்சி சிறையில் மருத்துவ முகாம்
திருச்சி: திருச்சி சிறையில் மாநிலத்திலேயே முதல் முறையாக சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. பிரமாண்டமான அளவில் நடந்த இந்த மருத்துவ முகாமில் 2000க்கும் மேற்பட்ட கைதிகள் கலந்து கொண்டு பலனடைந்தனர்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் திருச்சி மத்திய சிறைக்கு வந்து அங்கு அடைக்கப்பட்டுள்ள வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவை சந்தித்தார்.
அப்போது சிறையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என காடுவெட்டி குரு கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து அங்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த அமைச்சர் அன்புமணி நடவடிக்கை எடுத்தார்.
இந்த முகாமில், புதுச்சேரி ஜிப்மர், பெங்களூர் நிமான்ஸ், சென்னை அப்பல்லோ, திருச்சி ஜிவிஎன் மருத்துவமனை ஆகியவற்றிலிருந்து 95 டாக்டர்கள் வந்திருந்தனர்.
ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதிக்கான சோதனைகள், ஈசிஜி உள்ளிட்ட சோதனைகள் முகாமில் பங்கேற்ற கைதிகளுக்கு நடத்தப்பட்டன.
பல்வேறு பிரிவு சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு தமிழக சிறையில் மருத்துவ முகாம் நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications