For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓம வாட்டர் என நினைத்து ஆசிட் குடித்த பெண்

By Staff
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: ஓம வாட்டர் என நினைத்து ஆசிட்டைக் குடித்த பெண் மயக்கமடைந்தார்.

தூத்துக்குடி செல்வநாயகபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி அன்னபழம். உடல் சுகவீனத்தால் அன்னபழம் அப்பகுதியில் உள்ள ஒரு பெட்டிகடையில் ஓமவாட்டார் கேட்டார்.

அப்போது ஓமவாட்டார் என நினைத்து கடைக்காரர் பாலசுப்பிரமணியன் தவறுதலாக ஆசிட்டை ஊற்றி கொடுத்தார். ஆசிட் என அறியாமல் அதை வாங்கி மட.மட என குடித்த அன்னபழம் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

உடனே பதறிபோன அக்கம்பக்கத்தினர் அன்னபழத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

புகாரின் பேரில் கடைக்காரர் பாலசுப்பிரமணியனை தூத்துக்குடி வடபாகம் போலீசார் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X