சந்த்ராயன் அனுப்பிய முதல் படங்கள்!
10 நாட்களுக்கு முன் பிஎஸ்எல்வி மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது சந்த்ராயன். இப்போது நிலவுக்கு பாதி வழியில் உள்ள சந்த்ராயன் பூமியை படம் பிடித்து அனுப்ப ஆரம்பித்துள்ளது.
அதில் உள்ள டெர்ரைன் மேப்பிங் கேமரா (Terrain Mapping Camera) முதல் படமாக ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரைப் பகுதியை படம் பிடித்து அனுப்பியது. இந்தப் படம் 19ம் தேதி காலை 8 மணிக்கு எடுக்கப்பட்டது. அப்போது சந்த்ராயன் பூமியிலிருந்து 9,000 கி.மீ உயரத்தில் பறந்தது.
இதையடுத்து 12.30 மணிக்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு கடலோரப் பகுதியை சந்த்ராயன் படம் பிடித்து அனுப்பியது. அப்போது அது பூமியிலிருந்து 70,000 கி.மீ. உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.
இந்தப் படங்களை இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் காட்ட அவர் பெரும் ஆர்வத்துடன் அதைப் பார்த்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
நிலவை நெருங்கிய பின் சந்த்ராயன் அதைப் படம் பிடிக்க ஆரம்பிக்கும்.
இப்போது நீள்வட்டப் பாதையில் பூமியை சுற்றிக் கொண்டுள்ளது சந்த்ராயன். இப்போது அதற்கும் பூமிக்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் 465 கிமீயாகவும் அதிகபட்ச தூரம் 2,67,000 கிமீயாகவும் உள்ளது.
இந்த உயரம் அடுத்த 5 நாட்களில் மேலும் அதிகரிக்கப்பட்டு நிலவின் சுற்றுப் பாதைக்கு கொண்டு செல்லப்படும். பூமியிலிருந்து நிலா 3,84,000 கி.மீ தொலைவில் உள்ளது.













Click it and Unblock the Notifications