சிவராஜ் பாட்டீல் பதவி விலக வேண்டும்-தமுமுக
திருவாரூர்: மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உடனே பதவி விலக வேண்டும் என்றும் தமுமுக கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும், தமுமுக பொதுச் செயலாளருமான எஸ்.ஹைதர் அலி திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் நேரத்தில் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெற இந்துத்துவா அமைப்புகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றன.
காங்கிரஸ் ஆட்சியில் தான் பள்ளி வாசல்களிலும், அதுவும் குறிப்பாக வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு சிமி அமைப்புதான் காரணம் என்று மத்திய உளவுத்துறையும் உள்துறை அமைச்சரும் கூறுகின்றனர். ஆனால் குற்றவாளிகளை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
மத்திய உள்துறை அமைச்சக செயல்பாடுகள், மற்றும் நிர்வாகம் சரிவர இயங்கவில்லை என்பதையே இதை உணர்த்துகிறது.
இதற்கு பொறுப்பு ஏற்று மத்திய உள்துறை அமைச்சர் உடனே பதவி விலக வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications